திருக்குறள் - குறள் 722 - பொருட்பால் – அவை
அஞ்சாமை
குறள் எண்:
722
குறள் வரி:
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.
அதிகாரம்:
அவை அஞ்சாமை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அங்கவியல்
குறளின் விளக்கம்:
கற்றவரின்முன் தாம் கற்றவைகளை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்.