திருக்குறள் - குறள் 320 - அறத்துப்பால் - இன்னாசெய்யாமை
குறள் எண்: 320
குறள் வரி:
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.
அதிகாரம்:
இன்னாசெய்யாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
பிறருக்குத் துன்பம் செய்தவர்க்கே துன்பம்
வரும்; ஆகவே, தாம்
துன்பப்படக்கூடாது எனக்
கருதுபவர் பிறருக்குத் துன்பம் செய்யமாட்டார்.