திருக்குறள் - குறள் 283 - அறத்துப்பால் - கள்ளாமை
குறள் எண்: 283
குறள் வரி:
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.
அதிகாரம்:
கள்ளாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
திருடுவதனால் வந்த வளர்ச்சி, அளவு கடந்து வளர்வது போலத் தோன்றி, அடியோடு அழிந்து போகும்.