திருக்குறள் - குறள் 225 - அறத்துப்பால் - ஈகை
குறள் எண்: 225
குறள் வரி:
ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
அதிகாரம்:
ஈகை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
பசியைத் தாங்கிக் கொள்ளும் வலிமை பெரியது; ஆனால், அது, பசியை மாற்றுபவர் வலிமைக்குப் பிற்பட்டது.