திருக்குறள் - குறள் 95 - அறத்துப்பால் - இனியவை கூறல்
குறள் எண்: 95
குறள் வரி:
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
அதிகாரம்:
இனியவை கூறல்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
பணிவுடைமை,
இனிய சொற்களைப் பேசுதல்
ஆகிய இவையே ஒருவனுக்கு அணிகள்; மற்றவை அணிகள்
அல்ல.