நன்றி மறக்காத எறும்பு
ஒரு
கட்டெறும்பு தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. மரத்திலிருந்து இதைப் பார்த்த புறா
ஒன்று மரத்திலிருந்த இலை
ஒன்றைப் பறித்து நீரில்
வீசியது.
எறும்பும்
தத்தித் தத்தி வந்து
அந்த இலையின் மேல்
ஏறிக்கொண்டது. அந்த
இலை காற்றில் அசைந்து
மெதுவாகக் கரை பக்கம் ஒதுங்கக் கரையில்
ஏறி தப்பியது அந்த
எறும்பு.
மற்றொரு
நாள். ஒரு வேடன்
அந்த புறாவைக் குறி
வைப்பதைப் பார்த்தது அந்த
எறும்பு. ஆனால் புறாவோ
இதை அறியாமல் வேறெங்கோ
கவனமாக இருந்தது.
அன்று
தன்னைக் காப்பாற்றிய புறாவின்
உயிரைக் காப்பாற்ற வேண்டியது
தனது கடமையாக எண்ணியது
எறும்பு. விரைந்து சென்று
வேடனின் காலில் நறுக்கென்று கடித்தது.
கடியின்
வலி தாங்க முடியாமல்
கத்திய வேடனின் குறி
தப்பியது. சத்தத்தைக் கேட்டுத்
திரும்பிய புறா தனக்கேற்படவிருந்த ஆபத்தை அறிந்து
அந்த இடத்தை விட்டுப்
பறந்தது.
அன்று
புறா நமக்கென்ன என்று
அலட்சியமாயிருக்காமல் உதவி
செய்ததால்தான் புறாவின்
உயிர் தப்பியது. அந்த
சிறிய உருவம் கொண்ட
எறும்பும் நன்றி மறக்காமல்
செயல்பட்டது.