திருக்குறள்-குறள் 45-அறத்துப்பால்-இல்வாழ்க்கை
குறள் எண்: 45
குறள் வரி:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
அதிகாரம்:
இல்வாழ்க்கை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
குடும்ப வாழ்க்கையில் அன்பும் அறமும் நிறைந்திருக்குமானால், அவையே அவ்வாழ்க்கையின் பண்பும் பயனும் ஆகும்.