திருக்குறள் - குறள் 686 - பொருட்பால் – தூது
குறள் எண்:
686
குறள் வரி:
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது.
அதிகாரம்:
தூது
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அங்கவியல்
குறளின் விளக்கம்:
போன இடத்திலுள்ள நிலைமையை அறிந்து, யாரிடத்தும் அஞ்சாமல், சொல்ல வேண்டியதை விளங்கச் சொல்லி, சமயோசிதமாக நடந்து கொள்ளத் தெரிந்திருப்பதுதான் தூது.