திருக்குறள் - குறள் 680 - பொருட்பால் – வினைசெயல்வகை
குறள் எண்:
680
குறள் வரி:
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.
அதிகாரம்:
வினைசெயல்வகை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அங்கவியல்
குறளின் விளக்கம்:
ஆளும் இடம் சிறியராய் உள்ள அரசர், தம்மினும் பெரியார் தம்மீது போர்க்கு எழுந்துழி தம் நாட்டில் உள்ளார் துன்பத்தால் நடுங்கலுக்கு அஞ்சி, சமாதானம் ஏற்பட வழி பெற்றால் அவரைப் பணிந்து ஏற்றுக்கொள்வர்.