திருக்குறள் - குறள் 674 - பொருட்பால் – வினைசெயல்வகை
குறள் எண்:
674
குறள் வரி:
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.
அதிகாரம்:
வினைசெயல்வகை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அங்கவியல்
குறளின் விளக்கம்:
செய்யத் தொடங்கிய ஒரு செயல், தீர்க்கத் தொடங்கிய ஒரு பகை, ஆகிய இரண்டனையும் அரைகுறையாக விட்டுவைத்தல் கூடாது. அவ்வாறு விட்டுவைக்க எண்ணினால், தீயின் ஒரு பகுதியை மட்டும் அணைக்காமல் விட்டுவைத்தால் அஃது அவ்விதம் பின் வளர்ந்து கெடுதியை விளைவிக்குமோ அந்த அரைகுறைச் செயலும் பகைமையும் கெடுதல் விளைவிக்கும்.