திருக்குறள் - குறள் 669 - பொருட்பால் – வினைத்திட்பம்
குறள் எண்: 669
குறள் வரி:
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.
அதிகாரம்:
வினைத்திட்பம்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அங்கவியல்
குறளின் விளக்கம்:
முடிவில் இன்பம் தரத்தக்க ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் மிகுதியாக வருமாயினும் அத்துன்பம் நோக்கி உள்ளம் தளராது துணிவு மேற்கொண்டு செய்து முடித்தல் வேண்டும்.