திருக்குறள் - குறள் 661 - பொருட்பால் – வினைத்திட்பம்
குறள் எண்: 661
குறள் வரி:
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
அதிகாரம்:
வினைத்திட்பம்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அங்கவியல்
குறளின் விளக்கம்:
ஒரு தொழிலினிடத்துத் திண்மை என்பது ஒருவன் உள்ளத்தின் உறுதியேயாகும். மற்றவையெல்லாம் இதற்கு அடுத்தவையாகவே கொள்ளுதல் வேண்டும். மற்றவை -கருவி, உபாயம் முதலியன; படை, அரண், நட்பு முதலியவைகளையும் கொள்ளலாம். வினைத்திட்பம் செயலின்கண் உறுதியாய் இருத்தல்.