திருக்குறள் - குறள் 660 - பொருட்பால் – வினைத்துய்மை
குறள் எண்: 660
குறள் வரி:
சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்துஇரீஇ யற்று.
அதிகாரம்:
வினைத்துய்மை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அங்கவியல்
குறளின் விளக்கம்:
வஞ்சத்தாலே பொருள்தேடி மகிழ்ந்திருத்தல், பசுமட்கலத்திலே நீரை முகந்துவைத்த தன்மைத்து என்றவாறு; இது, தானும் பொருளுங் கூடிக் கெடும் என்றது.