திருக்குறள் - குறள் 629 - பொருட்பால் – இடுக்கண் அழியாமை
குறள் எண்: 629
குறள் வரி:
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.
அதிகாரம்:
இடுக்கண் அழியாமை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
இன்பம் வரும்போது மகிழாதவன்,
துன்பம்
வரும்போதும்
கலங்கமாட்டான்.