திருக்குறள் - குறள் 585 - பொருட்பால் – ஒற்றாடல்
குறள் எண்: 585
குறள் வரி:
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.
அதிகாரம்:
ஒற்றாடல்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
யாரும் அறியமுடியாத வேடமிட்டு, எதற்கும் அஞ்சாமல், எந்தச் சூழலிலும் தன் மனத்தில் உள்ளத்தைப் பிறருக்கு வெளிப்படுத்தாமல், எல்லாவற்றையும் அறிபவனே ஒற்றன்.