திருக்குறள் - குறள் 580 - பொருட்பால் – கண்ணோட்டம்
குறள் எண்: 580
குறள் வரி:
பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
அதிகாரம்:
கண்ணோட்டம்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
பாராட்டத்தக்க நாகரிகத்தை விரும்புபவர்கள் தமக்கு வேண்டியவர் நஞ்சினைப் பெய்து கொடுத்தாலும், அதனை உண்டு அமைதியாக இருப்பர்.