திருக்குறள் - குறள் 452 - பொருட்பால் – சிற்றினஞ் சேராமை
குறள் எண்: 452
குறள் வரி:
நிலத்தியல்பான் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்பது ஆகும் அறிவு.
அதிகாரம்:
சிற்றினஞ் சேராமை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
நிலத்தின்
தன்மைக்கு ஏற்ப, பெய்த
நீரின் தன்மை திரியும்;
அதுபோல், தாம் சேர்ந்த
இனத்திற்குத் தக்கவாறே
மனிதர்களுக்கு அறிவு திரியும்