திருக்குறள் - குறள் 451 - பொருட்பால் – சிற்றினஞ் சேராமை
குறள் எண்: 451
குறள் வரி:
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
அதிகாரம்:
சிற்றினஞ் சேராமை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
பெருமைக்கு உரியவர்கள் அற்பர்களைக் கண்டு
அஞ்சி
ஒதுங்குவர்; இழிந்த குணம்
உடையவர்களே அற்பர்களைத் தம் சுற்றமாகக் கொண்டு
தழுவிக் கொள்வர்.