திருக்குறள் - குறள் 423 - பொருட்பால் – அறிவுடைமை
குறள் எண்: 423
குறள் வரி:
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
அதிகாரம்:
அறிவுடைமை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
எந்த
ஒன்றைப் பற்றியும் யார்யார்
என்ன சொன்னாலும் அப்படியே ஏற்றுக் கொள்ளாமல்,
அதன் மெய்ம்மைப் பொருளை அறிவதே அறிவு.