திருக்குறள் - குறள் 411 - பொருட்பால் – கேள்வி
குறள் எண்: 411
குறள் வரி:
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.
அதிகாரம்:
கேள்வி
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
செல்வங்களுள் சிறந்த செல்வம் கேள்விச்
செல்வம்; அச்செல்வமே தலைமையான
செல்வம்.