திருக்குறள் - குறள் 489 - பொருட்பால் – காலமறிதல்
குறள் எண்: 489
குறள் வரி:
எய்தற்கு அரிய இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல்.
அதிகாரம்:
காலமறிதல்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
கிடைப்பதற்கு அரிய காலம் கிடைத்தால், உடனே செய்வதற்குக் கடினமான செயல்களைச் செய்துவிடு.