திருக்குறள் - குறள் 481 - பொருட்பால் – காலமறிதல்
குறள் எண்: 481
குறள் வரி:
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
அதிகாரம்:
காலமறிதல்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
பகல்
வேளையில் வலிமையுடைய ஆந்தையையும் காக்கை
வெல்லும்; அதுபோலப் பகைவரை
வெல்லக் கருதும் ஆட்சியாளரும் காலத்தைச்
கருத்தில் கொள்ள வேண்டும்.