திருக்குறள் - குறள் 487 - பொருட்பால் – காலமறிதல்
குறள் எண்: 487
குறள் வரி:
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
அதிகாரம்:
காலமறிதல்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
அறிவுடையவர் எடுத்த எடுப்பிலேயே கொதிப்பு
அடையமாட்டார்; உள்ளத்தில் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு
தக்க காலம் பார்த்து இருப்பார்.