திருக்குறள் - குறள் 325 - அறத்துப்பால் - கொல்லாமை
குறள் எண்: 325
குறள் வரி:
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.
அதிகாரம்:
கொல்லாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
இன்னும்
பக்குவப்படாத தம்
நிலை கண்டு அஞ்சி எல்லாவற்றையும் விட்டுவிட்டவர்களுள், கொலையால் வரும்
விளைவுக்கு அஞ்சிக் கொலை
செய்யாமையைத் தன் வாழ்க்கையாகக் கொண்டவன்
தலைமையானவன்.