திருக்குறள் - குறள் 313 - அறத்துப்பால் - இன்னாசெய்யாமை
குறள் எண்: 313
குறள் வரி:
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.
அதிகாரம்:
இன்னாசெய்யாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
தான்
ஒரு துன்பமும் செய்யாதிருக்க, தனக்குத் துன்பம் செய்தாரே
எனக் கொண்டு ஒருவர்க்குத் துன்பம் செய்தால், அது
தனக்குத் தீராத துன்பத்தைத் தரும்.