திருக்குறள் - குறள் 309 - அறத்துப்பால் - வெகுளாமை
குறள் எண்: 309
குறள் வரி:
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.
அதிகாரம்:
வெகுளாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
ஒருவன்
தன் உள்ளத்தில் சினம்
கொள்ளவில்லையானால், அவன்
நினைத்தவை எல்லாம் உடனே
கிடைக்கும்.