திருக்குறள் - குறள் 301 - அறத்துப்பால் - வெகுளாமை
குறள் எண்: 301
குறள் வரி:
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்.
அதிகாரம்:
வெகுளாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
சினம்
கொள்ள வாய்ப்புள்ள இடத்தில்கூடச் சினம் வராமல் காத்துக்
கொள்பவனே சினத்தைக் கட்டுப்படுத்தியவன் ஆவான். வாய்ப்பில்லாத இடத்தில் சினத்தைக் காத்தால்
என்ன, காக்காவிட்டால் என்ன?