திருக்குறள் - குறள் 285 - அறத்துப்பால் - கள்ளாமை
குறள் எண்: 285
குறள் வரி:
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
அதிகாரம்:
கள்ளாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
பிறர் பொருளைத் திருடக் கருதி, அவர் ஏமாறும் நேரம் பார்த்திருப்பவரிடம், அருளை நினைத்து அன்புடையவராகும் தன்மை இருக்காது.