உலக சுற்றுலா நாள் (World Tourism Day) உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் செப்டம்பர் 27ம் நாளில் 1980ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1979இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
அக்டோபர், 1997இல் துருக்கியில் நடந்த உலக சுற்றுலா நிறுவனத்தின் கூட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாடு இந்நிகழ்வை நடத்த அழைக்கப்படவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 2003இல் பீக்கிங்கில் இடம்பெற்ற கூட்டத்தில் பின்வரும் ஒழுங்கு முறையில் இந்நாள் கொண்டாடப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது: 2006 இல் ஐரோப்பா, 2007இல் தெற்காசியா; 2008இல் அமெரிக்கா, 2009இல் ஆபிரிக்கா.
2007இல் இலங்கையில் இந்நாள் கொண்டாடப்பட்டது. இதன் கருப்பொருள்: "சுற்றுலாக் கதவுகள் பெண்களுக்குத் திறக்கப்பட்டுள்ளன" (Tourism opens doors for women).
உலக சுற்றுலா தினம் 2021: தீம் இந்த ஆண்டு, இந்த சிறப்பு தினத்தின் கருப்பொருள் 'உள்ளடக்கிய வளர்ச்சிக்கான சுற்றுலா'. இது சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய மக்களுக்கு எல்லா வழிகளிலும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. UNWTO வணிகங்கள், சுற்றுலாப் பயணிகள், ஐ.நா. நிறுவனங்கள், உறுப்பு நாடுகள் மற்றும் உறுப்பினர்கள் அல்லாதவர்கள் "உலகம் மீண்டும் திறந்து எதிர்காலத்தைப் பார்க்கத் தொடங்கும் போது யாரும் பின்தங்கிவிடாதபடி சுற்றுலாவின் தனித்துவமான திறனைக் கொண்டாட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளது.