நாடு முழுவதும் ஹிந்தி பேசும் மக்களால் கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் தேதியன்று இந்தி நாள் கொண்டாடப்படுகிறது. கடந்த 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி சுதந்திர இந்தியாவின் அலுவல் மொழி என்ற அந்தஸ்தை இந்தி பெற்றது. இதனை நினைவு கூறும் வகையில் இந்தி நாள் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் பல்வேறு இந்தி பேசும் மாநிலங்கள தேவநாகரி எழுத்துக்களில் இந்தியை அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றுக்கொண்டன . இந்த முடிவு இந்திய அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது, இது ஜனவரி 26, 1950 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 343 இன் கீழ், தேவநாகரி எழுத்துக்களில் எழுதப்பட்ட இந்தி உத்தியோகபூர்வ மொழிகளில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.