திருக்குறள் - குறள் 278 - அறத்துப்பால் - கூடா ஒழுக்கம்
குறள் எண்: 278
குறள் வரி:
மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.
அதிகாரம்:
கூடா ஒழுக்கம்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
உள்ளத்தில் குற்றம் உடையவராக இருந்து
கொண்டு, தவச் சிறப்புடையவர் போல்
நீராடி வஞ்சித்து வாழும்
வேடதாரிகள் பலர் உண்டு.