திருக்குறள் - குறள் 265 - அறத்துப்பால் - தவம்
குறள் எண்: 265
குறள் வரி:
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.
அதிகாரம்:
தவம்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
விரும்பியவை விரும்பியவாறே தவத்தால் கிடைக்கும்; ஆகவே அத்தவம் இவ்வுலகில் முயன்று மேற்கொள்ளப்படும்.