திருக்குறள் - குறள் 246 - அறத்துப்பால் - அருளுடைமை
குறள் எண்: 246
குறள் வரி:
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்துஒழுகு வார்
அதிகாரம்:
அருளுடைமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
அருளை விட்டுவிட்டு அதற்கு எதிரான கொடுமைகளைச் செய்து வாழ்பவர்கள், சமுதாய மதிப்பையும் இழந்து, பிறப்பின் பயனையும் மறந்தவர்கள் ஆவார்கள்.