திருக்குறள் - குறள் 258 - அறத்துப்பால் - புலால் மறுத்தல்
குறள் எண்: 258
குறள் வரி:
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
அதிகாரம்:
புலால் மறுத்தல்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
குற்றத்திலிருந்து நீங்கிய தெளிந்த அறிவினையுடையவர், ஓர் உயிரிலிருந்து நீங்கிய உடம்பை உண்ணமாட்டார்.