திருக்குறள் - குறள் 109 - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்
குறள் எண்: 109
குறள் வரி:
கொன்றன்ன
இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
அதிகாரம்:
செய்ந்நன்றி அறிதல்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
முன்பு நன்மை செய்தவர், பின்பு கொல்வதைப் போன்ற தீமை செய்தாலும், அத்துன்பம் அவர் செய்த நன்மையை நினைத்தவுடனே மறந்து போகும்.