திருக்குறள் - குறள் 119 - அறத்துப்பால் - நடுவுநிலைமை
குறள் எண்: 119
குறள் வரி:
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.
அதிகாரம்:
நடுவுநிலைமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
உள்ளத்தில் கோணாத உறுதியோடு, சொல்லிலும் கோணல் தோன்றாதிருப்பதே நடுவுநிலைமை.