திருக்குறள் - குறள் 96 - அறத்துப்பால் - இனியவை கூறல்
குறள் எண்: 96
குறள் வரி:
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
அதிகாரம்:
இனியவை கூறல்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
நல்லனவற்றை ஆராய்ந்து அறிந்து இனிமையாகச் சொன்னால், தீமை அழியும்;
அறம் பெருகும்.