திருக்குறள் - குறள் 94 - அறத்துப்பால் - இனியவை கூறல்
குறள் எண்: 94
குறள் வரி:
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
அதிகாரம்:
இனியவை கூறல்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
எல்லோரிடமும் இன்பம் தரக்கூடிய இனிய
சொற்களையே பேசுபவருக்குத் துன்பம்
தரக்கூடிய வறுமை இல்லாமல்
போகும்.