கண்மூடித்தமாக யாரையும் நம்பவேண்டாம்
ராமன்
யார் எது சொன்னாலும் உடனே நம்பி விடுவான்.
ஒரு நாள் சந்தைக்கு
அவன் போன போது
ஒரு வியாபாரி ஒரு
கூண்டுக்குள். கிளி
ஒன்றை வைத்து விற்றுக்
கொண்டிருந்தான். இந்தக்
கிளி பேசும் கிளி
என்றான்.
ராமனும்
நூறு ரூபாய் கொடுத்து
அந்தக் கிளியை வாங்கினான். வீட்டில் அதற்கு பேசப்
பழக்கினான். ஒரு மாதம்
ஆகியும் அந்தக் கிளி
பேசவில்லை. அதை அவன்
எடுத்துக்கொண்டு. தான்
அதை வாங்கிய வியாபாரியிடம் சென்றான்.
அந்த
வியாபாரியோ, அந்தக் கிளியை
வாங்கி பரிசோதிப்பது போல
பாசங்கு செய்து இந்த
கிளிக்கு காது கேட்காது.
அதனால் நீங்கள் சொல்வதைக் கேட்டும் அந்த கிளியால்
பேச இயலவில்லை என்று
சொல்லி வேறு ஒரு
கிளியைக் காட்டி இதை
வாங்கிக் கொள்ளுங்கள் இது
பேசும் என்றான்.
ராமன்
மீண்டும் ஒரு நூறு
ரூபாய் கொடுத்து அந்தக்
கிளியை வாங்கினான். அதற்கும்
பேசக் கற்றுக்கொடுத்தான். அதுவும்
பேசவில்லை. அப்போது ராமனின்
நண்பர் ஒருவர் வந்தார்.
அவரிடம் ராமன் நடந்ததைக்
கூறினான்.
உடனே
அந்த நண்பர் அடடா…
என்னை முதலிலேயே கேட்டிருக்கலாமே… அந்த வியாபாரி ஒரு
பொய்யன். பொய் சொல்லி
வியாபாரம் செய்வதே அவன்
பிழைப்பு என்றான்.
ராமன்
தான் ஏமாற்றப்பட்டதை எண்ணி
மனம் வருந்தினான். யார்
என்ன சொன்னாலும் அதைக்
கேட்காமல் நமது அறிவை
உபயோகித்து அது சாத்தியமா..?
என யோசித்து செயல்படவேண்டும்.
கருத்து: கண்மூடித்தமாக யாரையும் நம்பவேண்டாம்
Post a Comment