திருக்குறள்-குறள் 55-அறத்துப்பால்- வாழ்க்கைத் துணைநலம்
குறள் எண்: 55
குறள் வரி:
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
அதிகாரம்:
வாழ்க்கைத் துணைநலம்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
கணவன் பிரிந்தபோது, பிற தெய்வங்களைத் தொழாமல், தன் கணவனை நினைத்துத் தன் கடமைகளைச் செய்து உயர்வு அடைபவள், பெய் என்றால் மழையும் பெய்யும்.