திருக்குறள்-குறள் 53-அறத்துப்பால்- வாழ்க்கைத் துணைநலம்
குறள் எண்: 53
குறள் வரி:
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.
அதிகாரம்:
வாழ்க்கைத் துணைநலம்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
மனைவி சிறப்புடையவளாக இருந்தால், கணவனுக்கு இல்லாதது என என்ன உள்ளது? மனைவி சிறப்பில்லாதவளாக இருந்தால், கணவனுக்கு இருப்பது என என்ன உள்ளது?