திருக்குறள்-குறள் 49-அறத்துப்பால்-இல்வாழ்க்கை
குறள் எண்: 49
குறள் வரி:
அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.
அதிகாரம்:
இல்வாழ்க்கை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
அறம் என்றாலே அது குடும்ப வாழ்க்கைதான். அந்தக் குடும்ப வாழ்க்கையும் யாராலும் பழிக்கப்படாமல் இருப்பது நல்லது.