Buy Exam Books Here | |
To Join Whatsapp | |
To Follow FaceBook | |
To Join Telegram Channel | |
To Follow Twitter | |
To Follow Instagram |
முட்டாள்தனத்தை நினைத்து
வருந்திய
ஆடு
- சிந்தித்து
செயல்படு
ஒரு
நாள் நரி ஒன்று கிணற்றில் தவறி
விழுந்துவிட்டது. விழுந்த
அந்த நரி, யாராவது
வந்து தன்னை காப்பாற்றுவார்கள் எனக் காத்திருந்தது. ஆனால், ஒருவரும் அந்தப்
பக்கம் வரவில்லை.
சாப்பிடவும் முடியாமல், தூங்கவும் முடியாமல்
தண்ணீக்குள்ளேயே தவித்துக் கொண்டிருந்தது. பத்து
நாட்கள் கடந்து போனது.
அந்தப் பக்கமாக ஓர்
ஆடு கத்திக்கொண்டே வந்தது.
உடனே
நரி உஷாரானது. ஆட்டை
வைத்து எப்படியாவது மேலே
வந்துவிட வேண்டும் என்று
நினைத்துக்கொண்டது. ஆடு அண்ணா,
ஆடு அண்ணா, இங்கே
வாயேன் என்று அன்போடு
அழைத்தது நரி.
கிணற்றில்
இருந்து வந்த குரலைக்
கேட்டதும், ஆடு எட்டிப்
பார்த்தது. என்ன நரியாரே..
தவறி விழுந்துட்டீயா? என்று
கேட்டது ஆடு. ச்சே.. ச்சே.. நானாவது விழுவதாவது.
நான் வேணும்னுதான் கிணற்றுக்குள்ளே இறங்கினேன். இந்தக் கிணற்றுத் தண்ணீர் ரொம்ப சுவையாக இருக்கு. நீ வேணும்னா இறங்கி வந்து குடிச்சுப்பாரேன் என்றது நரி. ஆடு கொஞ்சமும் யோசிக்கவில்லை.
உடனே கிணற்றுக்குள் குதித்தது. நரியே.. இந்தத் தண்ணீர் சுவையா ஒன்னும் இல்லையே.. உன்னை நம்பி வந்தேன் பாரு.. இப்போ எப்படி வெளியில போறது? என்று கேட்டது ஆடு.
முதல்ல உன் மேலே ஏறி நான் வெளியே போறேன். அப்புறம் கையை நீட்டறேன், கையைப் பிடிச்சிக்கிட்டு நீயும் வெளியே வந்துடு என்றது நரி. ஆடும் ஒப்புக்கொண்டது. ஆடு மீது ஏறி நரி வெளியே வந்தது.
கையை கொடு.. என்னைச் சீக்கிரமா காப்பாத்து என்றது ஆடு. உன்னை நான் எப்படிக் காப்பாத்துறது? எதைச் செஞ்சாலும் விவேகமா, புத்திசாலித்தனத்தோட செய்யணும்.ன்னு சொல்லிட்டு நரி கிளம்பியது. முட்டாள்தனத்தை நினைத்து ஆடு வருந்தியது.
கருத்து: சிந்தித்து செயல்படு